மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு விழா.

மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு விழா – 2022 இல் கூடைப்பந்தாட்டப் போட்டியில் இம்முறை மண்முனை வடக்கு பிரிவின் ஆண்கள் அணியினர் சம்பியனாக தெரிவானதுடன், பெண்களுக்கான வலைப்பந்து போட்டியில் ஏறாவூர்ப்பற்று பெண்கள் அணியினர் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளனர்.

அதே வேளை பெண்களுக்கான வலைப்பந்து போட்டியில் மண்முனை வடக்கு அணியினர் இரண்டாம் இடத்தினையும், கூடைப்பந்தாட்டப் போட்டியில் ஆண்கள் பிரிவில் ஏறாவூர்ப்பற்று ஆண்கள் அணியினர் இடண்டாம் இடத்தினையும்
பெற்றுள்ளனர்.

குறித்த விளையாட்டு நிகழ்வுகள் வெபர் விளையாட்டு மைதான வளாகத்திலும் புனித மிக்கேல் கல்லூரியிலும் இடம்பெற்றதுடன், குறித்த விளையாட்டு நிகழ்வுகள் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வே.ஈஸ்பரன் தலைமையில் இடம்பெற்றிருந்தது.

அதேவேளை மாகாண மட்ட விளையாட்டு விழாவிற்கான போட்டிகள் எதிர்வரும் 17 மற்றும் 18 திகதிகளில் மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.