கடலில் மூழ்கி தாய், மகன், மருமகன் பரிதாபச் சாவு!

அம்பலாந்தோட்டைப் பிரதேசத்தில் கடலில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மருமகன் ஆகியோர் பலியாகியுள்ளனர்.

அம்பலாந்தோட்டை, வெலிபதன்வில பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு இன்று சென்ற ஒரு குழுவினர் அங்கிருந்து கடலுக்குக் குளிக்கச் சென்றுள்ளனர்.

இதன்போதே கடலில் மூழ்கி மூவர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் சடலங்களைத் தேடும் நடவடிக்கையில் கடற்படையினர், பொலிஸார் ஆகியோருடன் பொதுமக்களும் இணைந்துள்ளனர்.

கடலில் மூழ்கி உயிரிழந்த தாய்க்கு 55 வயது எனவும், அவரது மகனுக்கு 16 வயது எனவும், மருமகனுக்கு 22 வயது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.