ரயிலில் ஏற முயன்ற 23 வயது இளைஞன் பரிதாபமாக உயிரிழந்தார் (வீடியோ)

மாத்தறை புகையிரத நிலையத்தில் வைத்து பெலியத்த நோக்கிச் சென்ற சாகரிகா ரயிலில் ஏற முயன்ற இளைஞர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

நேற்று (17) பிற்பகல் டிக்வெல்ல – வெவுருகன்னல பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞன் பணி முடிந்து வீடு திரும்பிய வேளையில் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

புகையிரதம் வீழ்ந்ததையடுத்து புகையிரதத்திற்கும் பிளாட்பாரத்திற்கும் இடையில் சிக்கியிருந்த இந்த இளைஞனை மீட்க அங்கிருந்தவர்கள் பெரும் முயற்சி மேற்கொண்ட போதும் அது தோல்வியடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.