எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவ அதிகாரிக்கு கத்தி வெட்டு

அம்பிலிபிட்டிய 100வது கட்டை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற சம்பவத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் வெட்டுக் காயங்களுடன் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கதுருகஸ் ஆற பொறியியலாளர் படை முகாமின் இராணுவ அதிகாரி ஒருவரே வெட்டுக்காயங்களோடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இராணுவ அதிகாரியின் கையை நபர் ஒருவர் கத்தியால் வெட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் எம்பிலிபிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.