இலங்கை தொடர்பில் நியூசிலாந்து மற்றும் பிரித்தானியா எடுத்த கடும் தீர்மானம்!

பிரித்தானியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் அத்தியாவசியமான காரணங்கள் தவிர, இலங்கைக்கு செல்வதை தவிர்க்குமாறு அந்நாட்டு பிரஜைகளுக்கு அறிவித்துள்ளன.

அந்த நாடுகளின் பயண ஆலோசனைகளை புதுப்பித்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் மருந்து, எரிவாயு, எரிபொருள், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், இலங்கையில் மின்வெட்டு, போராட்டம், திடீர் சாலை மறியல், போராட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் அவர்கள் நினைவு கூர்ந்துள்ளனர்.

இதன்காரணமாக அத்தியாவசிய தேவைகளுக்கு அன்றி இலங்கைக்கு செல்ல வேண்டாம் என பிரித்தானியாவும் நியூசிலாந்தும் தெரிவித்துள்ளன.

Leave A Reply

Your email address will not be published.