ரணில் உடனடியாக பதவி விலக வேண்டும் – அமைச்சர் தம்மிக்க பெரேரா (Video)

ரணில் விக்கிரமசிங்க ,  கிடைக்கும் டொலரை கிடைக்க தடையாக உள்ளார். எனவே நிதியமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், அந்நிய செலாவணி நெருக்கடிக்கு தீர்வு காணும் திட்டம் எதுவும் நிதியமைச்சர் ரணிலிடம் இல்லை என தெரிவித்தார்.

நிதியமைச்சர் ரணில் , நாட்டில் ஒரு பேரழிவை உருவாக்க  திட்டமிடுவதாகவும்,  எனவே உடனடியாக  ரணில் விக்கிரமசிங்க வகிக்கும்  நிதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பிரதமரின் உள்ள பொருளாதாரத் திட்டம் என்ன என்பது குறித்து பகிரங்க விவாதத்திற்கு வருமாறும்  தம்மிக்க பெரேரா சவால் விடுத்தார்.

Leave A Reply

Your email address will not be published.