ஆஸி. செல்ல முயன்ற 65 பேருக்குப் பிணை!

படகு மூலம் ஆஸ்திரேலியா செல்ல முற்பட்ட வேளை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 67 பேரில் 65 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்குச் செல்வதற்காகப் படகில் பயணத்தை ஆரம்பித்த சந்தர்ப்பத்தில் வாழைச்சேனை கடற்பரப்பில் வைத்து 67 கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் 11 சிறுவர்களும் 6 பெண்களும் அடங்குகின்றனர்

கைதுசெய்யப்பட்டவர்கள் திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவர்களில் படகின் ஓட்டுநரும் மக்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்ட முகவரும் தவிர்ந்த ஏனையவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

அவர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.