ஜனாதிபதி பதவி விலகினால் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? சட்டமா அதிபருடன் பிரதமர் ஆலோசனை.

ஜனாதிபதி பதவிக்கு வெற்றிடம் ஏற்படின் மேற்கொள்ள வேண்டிய எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பான சட்டமா அதிபரின் நிலைப்பாடு பிரதமரின் செயலாளருக்கு இன்று அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் சட்டமா அதிபரின் நிலைப்பாடு வினவப்பட்டதன் அடிப்படையிலேயே இந்தப் பதில் அனுப்பப்பட்டுள்ளது.

எனினும், அதில் அடங்கியுள்ள தகவல்கள் வெளியாகவில்லை.

முன்னதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை தமது பதவி விலகலை உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.