கோட்டாவை உடன் திருப்பியனுப்பக் கோரி மாலைதீவில் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டம்.

மாலைதீவில் வசிக்கும் இலங்கையர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் சோலியின் வீட்டுக்கு அருகில் அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கோட்டாபய ராஜபக்சவை உடனடியாகத் இலங்கைக்குத் திருப்பி அனுப்புமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கையிலிருந்து விமானப்படையின் விமானம் மூலம் மாலைதீவுக்குச் சென்றார்.

அரசின் வேண்டுகோளுக்கு ஜனாதிபதி மாலைதீவு செல்வதற்கு விமானம் வழங்கியதாக விமானப்படை தெரிவித்தது.

ஜனாதிபதியுடன் அவரது மனைவி மற்றும் அவர்களின் இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் நாட்டை விட்டு வெளியேறினர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியதைப் பிரதமர் அலுவலகமும் உறுதிப்படுத்தியது.

Leave A Reply

Your email address will not be published.