சமூக வலைத்தளத்தில் வைரலாகும் கோட்டாவின் பதவி விலகல் கடிதம்! போலியானது என்கிறது அரசியல் வட்டாரம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் கடிதம் எனத் தெரிவிக்கப்படும் ஆவணம் ஒன்று இன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

கோட்டாபய ராஜபக்சவின் பெயருள்ள இடத்தில் கையெழுத்திடப்படாத கடிதமே இவ்வாறு பகிரப்பட்டு வருகின்றது.

குறித்த பதவி விலகல் கடிதத்தில் நேற்றைய தினத்துக்கான திகதி (13.07.2022) இடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் கடிதம் இதுவரை தமக்குக் கிடைக்கவில்லை என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

எனவே, இந்தக் கடிதம் போலியானதாக இருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.