கொழும்பில் மீளவும் ‘ஊரடங்கு’ உத்தரவு!

கொழும்பு மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று நண்பகல் 12 மணியிலிருந்து நாளை அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் இந்த ஊரடங்கு உத்தரவு தொடர்பில் விசேட அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பின் தற்போதைய நிலைமையில் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டே இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று பதில் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.