ஜூலை 20ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை.

அனைத்துப் பாடசாலைகளுக்கும்
ஜூலை 20 வரைக்கும் விடுமுறை

அனைத்து அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்வரும் 21ஆம் திகதி முதல் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் மற்றும் போக்குவரத்துப் பிரச்சினைகளைக் கருத்தில்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.