ரணிலை ஆதரிக்க மொட்டு தீர்மானிக்கவில்லை – தொலவத்த (Video)

சாகர காரியவசம் எப்பொழுதும் தனது லெட்டர் ஹெட்டையும் மொட்டின் லெட்டர் ஹெட்டையும் மாற்றிக் கொள்வார் என்றும் அவரால் பாராளுமன்ற உறுப்பினர்களை அதிகாரம் செய்யும் முடியாது என்றும் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்தார்.

இன்று (16) பாராளுமன்ற அமர்வின் இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு எந்த வகையிலும் ஆதரவளிப்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எடுக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் தொலவத்த குறிப்பிட்டார். மேலும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தமது கட்சி தீர்மானித்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்த கருத்தை நிராகரித்த தொலவத்த, இந்த தருணத்தில் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளில் இருந்து மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

போராட்டங்கள் செய்ய மக்களுக்கு உரிமை உண்டு. இந்த நேரத்தில் நிறங்கள் கட்சிகள் என எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாது, நாட்டின் நலனுக்காக முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றார் அவர்.

Leave A Reply

Your email address will not be published.