எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை : மைத்ரி (Video)

எதிர்வரும் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவருக்கும் வாக்களிப்பதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வாக்கு வேண்டும் என்றால் அனைவரும் நாட்டுக்கான வேலைத்திட்டத்தை முன்வைக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய ஜனாதிபதி பதவிக்கு ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க, டலஸ் அழகப்பெரும மற்றும் சரத் பொன்சேகா ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.