இங்கிலாந்திற்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட்- 83 ரன்னில் சுருண்டது தென் ஆப்பிரிக்கா.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், டி20 தொடர் மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

தற்போது இரு அணிகளுக்கும் இடையே ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றிருந்து. இந்நிலையில் 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

மழை காரணமாக இந்த போட்டி 29 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 28.1 ஓவர்களில் 201 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. அதிபட்சமாக அந்த அணி வீரர் லிவிங்ஸ்டோன் 38 ரன்கள் அடித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் டுவைன் பிரிட்டோரியஸ் நான்கு விக்கெட்களை கைப்பற்றினார். பின்னர் விளையாடிய தென்ஆப்பிரிக்க அணி 20.4 ஓவர்கள் முடிவில் 83 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் ஜானிமேன் மலான், வான்டெர் டஸன், மார்க்ராம் ஆகிய 3 பேரும் டக்-அவுட் ஆனார்கள்.

இதனால் 118 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷித் 3 விக்கெட்டும், மொயீன் அலி, ரீஸ் டாப்லே தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.