யாழில் அதிகரிக்கும் கொரோனா!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனோத் தொற்றுக்குள்ளான 6 நோயாளிகள் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெறுகின்றனர் என்று யாழ். போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களில் சிலரில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே குறித்த நபர்கள் தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டனர் .

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனாத் தடுப்பூசியை ஒரு வருடத்துக்கு முன்னர் பெற்றுக்கொண்டவர்கள் என்று பிரதிப் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, கடந்த ஜூலை மாதம் கொரோனாத் தொற்றால் யாழ்ப்பாணத்தில் இருவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.