அம்பாந்தோட்டைக்கு சீனக் கப்பல் வருமா? – பாதுகாப்பு அமைச்சின் செயலர் கருத்து.

“சீனக் கப்பல் இன்னமும் இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசிக்கவில்லை. அது இலங்கைக்கு வருமா என்பது தொடர்பில் உறுதியாக எதுவும் தெரிவிக்க முடியாது.”

இவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“சீனாவின் ‘யுவான் வாங் 5’ கப்பல் இன்னமும் இலங்கைக் கடற்பரப்புக்குள் பிரவேசிக்கவில்லை. சர்வதேச கடற்பரப்பில் தரித்து நிற்கின்றது. அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்குள் குறித்த கப்பல் வருமா என்பது தொடர்பில் எம்மால் உறுதியான பதில் எதுவும் வழங்க முடியாதது. ஏனெனில் இரு நாட்டு அரசுகளும் இந்தக் கப்பல் விவகாரம் தொடர்பில் தீவிர பேச்சில் ஈடுபட்டுள்ளன” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.