தமிழக மீனவர்கள் 10 பேர் கைது!

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 10 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் – தூத்துக்குடியில் இருந்து வந்த மீனவர்களே முல்லைத்தீவுக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளை இன்று பகல் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட 10 மீனவர்களையும் அவர்கள் பயணித்த விசைப் படகுடன் திருகோணமலைத் துறைமுகத்துக்குக் கடற்படையினர் கொண்டு சென்றனர்.

10 மீனவர்களும் விசாரணைகளின் பின்னர் நாளை காலை திருகோணமலை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.