முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய 3ம் திகதி நாடு திரும்புகிறார்?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை மறுநாள் (செப். 03) இலங்கை திரும்புவதற்கு தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி பதவியை விட்டு வெளியேறி மாலைதீவு மற்றும் சிங்கப்பூர் ஊடாக தாய்லாந்தில் சில வாரங்களை கழித்த கோட்டாபய ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதியின் சிறப்புரிமைகளை அனுபவிப்பார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச இலங்கைக்கு வந்தவுடன் முன்னாள் ஜனாதிபதியின் சிறப்புரிமைகளை அவர் அனுபவிப்பார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் திரு.சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஓகஸ்ட் 24ஆம் திகதி அவர் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட வேளை , சமூக வலைத்தளங்கள் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு நிகழ்வுகள் நாளை மறுநாள் இடம்பெறாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.