10ஆம் தேதி இலங்கை வருகிறார் சமந்தா பவர்!

ஐக்கிய நாடுகளின் உதவித் திட்டத்தின் தலைவியாக இருக்கும் சமந்தா பவர் எதிர்வரும் 10ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

இந்த விஜயத்தின் போது அவர் அரசாங்கத்தின் பிரதிநிதிகளையும் எதிர்க்கட்சி பிரதிநிதிகளையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பொதுவாக, மனித உரிமைகளில் அதிக கவனம் செலுத்தும் அதிகாரியாக சமந்தா பவர் காணப்படுகிறார்.

அதன்படி, ஜெனிவாவில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வு ஆரம்பமாகியுள்ள நிலையில் நடைபெறவுள்ள சமந்தா பவரின் இலங்கைப் பயணம் மிகவும் முக்கியமான ஒன்றாக அமையும் என பலரது கருதுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.