புளியங்குளத்தில் கோர விபத்து; மோ.சைக்கிளில் சென்ற நபர் பலி.

வவுனியா – புளியங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

வவுனியா நகர் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி புளியங்குளம் பாடசாலைக்கு முன்பாக சென்று கொண்டிருந்த ஹயஸ் ரக வாகனம் எதிரே வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் மோதுண்டு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

பஞ்சநாதன் குகேந்திரன் (வயது 49) என்ற நபரே மரணமடைந்தவராவார்.

சம்பவம் தொடர்பாக புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.