யாழில் வன்முறைக் கும்பலின் பிரதான சூத்திரதாரி 3 வாள்களுடன் கைது!

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்டு வந்த கும்பலின் பிரதான சந்தேகநபரைக் கைது செய்துள்ளதாக மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாவடியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

மானிப்பாயில் அண்மையில் இரு வேறு வீடுகளுக்குள் புகுந்து பெறுமதியான பொருள்களை அடித்துச் சேதப்படுத்தியமை கடந்த வருடம் அரியாலை மற்றும் பளையில் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்டமை தொடர்பில் குறித்த இளைஞர் தேடப்பட்டு வந்தார்.

அவருக்கு மோட்டார் சைக்கிள் வழங்கியமை தொடர்பில் ஒருவரும், வன்முறையில் ஈடுபட்ட இருவரும் என மூவர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேகநபரிடமிருந்து 3 வாள்கள், மோட்டார் சைக்கிள் என்பன சான்றுப்பொருள்களாக கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் ஐவர் தேடப்படுகின்றனர் என்றும் பொலிஸார் கூறினர்.

Leave A Reply

Your email address will not be published.