கண்ணீர் விட்டு கதறிய மகள்கள்! இலங்கை தமிழர்கள் முகாமில் நடந்தது என்ன? 4 பேர் கைது

தமிழகத்தின் தூத்துக்குடியில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் இரு தரப்புக்கு இடையே மோதல்.

கைது நடவடிக்கையை முன்னெடுத்த பொலிசார்.

தமிழகத்தில் உள்ள ஒரு இலங்கை தமிழர் முகாமில் ஏற்பட்ட சண்டை தொடர்பில் 4 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள இலங்கை தமிழர் முகாமில் ஒற்றுமையை வலியுறுத்தி கபடி போட்டி நடைபெற்றது. போட்டியின் போது குகன் என்பவா் போதையில் தகராறு செய்ததாகவும், அவரை போட்டி ஒருங்கிணைப்பாளா்களில் ஒருவரான சுதாகா் எச்சரித்து அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

இதனால், குகன், அவரது தம்பி தாஸ், நண்பா்கள் சோ்ந்து சுதாகரின் வீடு புகுந்து பெண்கள், குழந்தைகளை மிரட்டியுள்ளனா். அவா்களை முகாம் மக்கள் தாக்கினராம். இதையடுத்து, சுதாகரின் மனைவி சகாயராணி தனது 2 குழந்தைகள், முகாமைச் சோ்ந்த உறவினா் பெண் பஞ்சவா்ணம் ஆகியோருடன் குகன் தரப்பினா் மீது புகாரளிக்க மாசாா்பட்டி காவல் நிலையம் சென்றாா்.

அப்போது, பொலிசார் குழந்தைகளை வெளியே அனுப்பிவிட்டு, இரு பெண்களையும் காவல் நிலையத்துக்குள் பல மணி நேரம் இருக்க வைத்தனராம்.

இதனால் அவரது அவரது மகள்கள் கண்ணீர் விட்டு கதறும் நிலைக்கு தள்ளப்பட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டதை தொடர்ந்து அந்த பெண் விடுவிக்கப்பட்டார். 16 பேர் மீது வழக்கு பதிவு செய்த பொலிசார் குகன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.