மகிந்த அரசியலில் இருந்து ஓய்வு : ரணில் மொட்டு தலைவராகிறார்?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பிரதிநிதிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கூட்டணி தொடர்பில் கலந்துரையாடி வருவதாக கூறப்படுகிறது.

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய கூட்டணி எதிர்வரும் தேர்தலில் போட்டியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த தீர்மானத்திற்கு பொதுஜன பெரமுன கட்சிக்குள் உள்ள சிலர், தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக அறிய முடிகிறது.

Leave A Reply

Your email address will not be published.