இந்த வாரம் பிக்பாஸ் 6 வீட்டைவிட்டு வெளியேறப்போவது யார்?

பிக்பாஸ் 6வது சீசன் தான் இப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே சூடு பிடிக்க ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த அளவிற்கு இந்த சீசன் விறுவிறுப்பு குறையாமல் பரபரப்பாக நடந்து வருகிறது.

அதிலும் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பவர்கள் தான் வீட்டைவிட்டு வெளியேறுகிறார்கள். ஜி.பி.முத்து தானாக முன்வந்து வெளியேற முதல் எலிமினேஷனில் சாந்தி வீட்டைவிட்டு வெளியேறினார். அவரை தொடர்ந்து அடுத்த வாரத்தில் வீட்டில் பெண்களிடம் தவறாக நடந்துகொண்ட அசல் கோளாறு வெளியேறினார்.

அவர் வீட்டைவிட்டு வந்தது மக்களுக்கு நிகழ்ச்சி மீது ஒரு நம்பிக்கை வந்துள்ளது, மக்களின் கணக்கு படி தான் நிகழ்ச்சி செல்கிறது என்ற எண்ணத்திற்கு வந்துள்ளனர்.

இப்போது இந்த வார எலிமினேஷனுக்காக விக்ரமன், அசீம், ஆயிஷா, செரினா மற்றும் கதிர் இடம் பெற்றுள்ளனர். விக்ரமன் முதல் இடத்தில் இருக்க செரினா கடைசி இடத்தில் இருக்கிறார்.

செரினாவிற்கு முந்தைய இடத்தில் ஆயிஷா இருக்கிறார். எனவே செரினா அல்லது ஆயிஷா இந்த வாரம் வீட்டைவிட்டு வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.