கைதான 15 இந்திய மீனவர்களில் இருவர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் …

தலைமன்னார் வடக்கு கடற்கரையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களில் இருவர் கவலைக்கிடமான நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் உதவி கடற்றொழில் பரிசோதகர் தெரிவித்தார்.

தலைமன்னாரம் வடக்கு கடற்கரையில் சட்டவிரோதமாக நுழைந்து மீன்பிடித்த இரண்டு இந்திய மீன்பிடி படகுகளில் இருந்து 15 பேரை வடமத்திய கடற்படை கட்டளையால் கைது செய்துள்ளதாகவும், கைது செய்யப்பட்ட 15 மீனவர்களில் 15 வயது சிறுவனும் உள்ளடங்குவதாகவும் கடற்றொழில் பரிசோதகர் தெரிவித்தார்.

குறித்த இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து கடற்படை அதிகாரிகள் மீனவர்களை மன்னார் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைத்த போது 29 மற்றும் 32 வயதுடைய இரு மீனவர்கள் ஆபத்தான நிலையில் தலைமன்னாரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மன்னார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஏனைய மீனவர்களை மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் உதவி கடற்றொழில் பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.