இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இணைய வழியில் அமைச்சரவைக் கூட்டம்

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக இணைய தொழில்நுட்பம் ஊடாக இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பங்கேற்றார்.

நிலவும் கொரோனாத் தொற்று நிலைமையில் அமைச்சரவைக் கூட்டத்தின் நடைமுறை குறித்து எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு மத்தியில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் யோசனைக்கேற்ப இந்த அமைச்சரவைக் கூட்டம் இணைய தொழில்நுட்பத்தின் ஊடாக நடத்தப்பட்டது.

கொரோனாத் தொற்று நிலைமைக்கு மத்தியிலும் நாட்டின் அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்க்கை நிலை தொடர்பில் முன்னெடுக்க வேண்டிய தீர்மானங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி, அபிவிருத்தி நடவடிக்கைகளை முறையாகச் செயற்பாட்டு ரீதியில் முன்னோக்கிக் கொண்டு செல்லும் நோக்கில் அமைச்சரவைக் கூட்டம் இணைய தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்றது.

கொழும்பு 07. விஜேராமவிலுள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்திலிருந்து இணைய தொழில்நுட்பம் ஊடாக பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் குறித்த அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

அமைச்சரவை அமைச்சர்கள் தங்களது வீடுகள் மற்றும் அலுவலகங்களிலிருந்து மேற்படி அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.