யாழ் – கொழும்பு பஸ் விபத்தில் பலர் காயம் : சிலரது நிலமை கவலைக்கிடம்

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பஸ் ஒன்று இன்று (5) காலை கிளிநொச்சி 155 ஆவது கிலோமீற்றர் கல் அருகில் நெடுஞ்சாலையின் நடுவில் கவிழ்ந்ததில் 23 பயணிகள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் பேருந்து பலத்த சேதமடைந்தது.

Leave A Reply

Your email address will not be published.