தமிழ் மக்களின் வாக்குகளை அபகரிக்கவே புதுப் புதுக் கூட்டுக்கள்! – டக்ளஸ் விசனம்.

தமிழ் மக்கள் மத்தியில் புதிதாக உருவாக்கப்படும் கூட்டுகள் மக்களின் நலன் சார்ந்தவை அல்ல என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழில் நேற்று நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டபோது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் மக்கள் மத்தியில் புதிதாக உருவாக்கப்படும் கூட்டுகள்கள் மக்களின் நலன் சார்ந்தவை அல்ல. வாக்குகளை எவ்வாறு அபகரிப்பது என்பதே அவர்களின் நோக்கமாகும். அங்கு மக்கள் நலன் பின்தள்ளப்படுகின்றது.

அரைத்த மாவை மீள அரைக்கும் செயற்பாடுகளையே தமிழ்க் கட்சிகள் தொடர்ந்தும் மேற்கொள்கின்றன” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.