தமிழர்கள் எங்கு சென்றாலும், தமிழ்நாட்டு அடையாளத்துடனும், கலாச்சாரத்துடனும் தான் இருப்பார்கள் – ஆர்.என்.ரவி

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் சிவில் தேர்வில் வெற்றிபெற்று பயிற்சியில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 44 பேர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து கலந்துரையாடினர். நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, உறுதியாகவும், பணிவாகவும் இருந்து சிறப்பான பணியை கொடுங்கள் என்று பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

தமிழ்நாட்டில் பணியாற்றுவது மூலம் தான் அறியாத பல விஷயங்களை தெரிந்து கொண்டதாகவும், தொடர்ந்து தமிழ் மொழியை கற்று வருவதாகவும் கூறினார். தமிழ்நாட்டில் உள்ள பழங்கால கோயில்களில் கட்டிடக் கலை கிரேக்க கட்டடக்கலை கூட தோற்கும் என குறிப்பிட்ட அவர், தமிழின் கலாசாரம், அறிவு எவ்வளவு மகத்தானது என்பதை இது காட்டுகிறது என்றார்.

நம் நாட்டின் பிற பகுதிகள், தமிழின் சிறப்பை போதுமான அளவு அறியாதது வருத்தம் அளிக்கிறது என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். நாட்டின் எந்த மாநிலத்திற்கு சென்றாலும் அங்குள்ள மொழியை கற்றுக்கொள்ளுமாறு பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.