பஸ்ஸுடன் மோதியது மோட்டார் சைக்கிள்! தாயும், மகனும் பரிதாப மரணம்!!

வாகன விபத்தில் தாயும், மகனும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தம்புள்ளை – குருநாகல் வீதியில் கொகரெல்ல வைத்தியசாலைக்கு அருகில் இன்று இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாயும் மகனும் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியில் கவிழ்ந்து இ.போ.ச. பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும், மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

36 வயதான ரத்நாயக்க என்ற நபரும், 62 வயதான அவரின் தாயாருமே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

ரத்நாயக்க, குருநாகல் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள தனது மனைவியைப் பார்ப்பதற்காகத் தனது தாயுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே விபத்தில் சிக்கியுள்ளார்.

மோட்டார் சைக்கிள் வீதியில் கவிழ்ந்து கொழும்பிலிருந்து ஹொரவப்பத்தானை நோக்கிப் பயணித்த இ.போ.ச. பஸ்ஸுடன் மோதியுள்ளது என்று பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் இ.போ.ச. பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.