பஞ்சாப் ராணுவ முகாமில் துப்பாக்கிச்சூடு – 4 பேர் பலி

பஞ்சாப் மாநிலம் பதின்டா ராணுவ முகாமிற்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.

பஞ்சாப் மாநிலம் பதின்டாவில் உள்ள ராணுவ நிலையத்தில் அதிகாலை 4.35 மணிக்கு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்பு நிறைந்த ராணுவ முகாமிற்குள் நடந்த திடீர் தாக்குதலை அடுத்து, குறிப்பிட்ட பகுதி சுற்றி வளைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் முதற்கட்ட விசாரணையில் இது பயங்கரவாத தாக்குதல் இல்லை என பஞ்சாப் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு 28 தோட்டாக்களும், துப்பாக்கி ஒன்றும் காணாமல் போனதாக கூறியுள்ள காவல்துறையினர். தாக்குதல் நடத்தியது யார், பின்னணியில் ஏதேனும் அமைப்புகள் உள்ளனவா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.