‘மொட்டு’வின் ஜனாதிபதி வேட்பாளர் பஸிலாகக் கூட இருக்கலாம்! – சாகர அதிரடி.

“அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி வேட்பாளரை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி களமிறக்கும். அந்த வேட்பாளர் பஸில் ராஜபக்சவாகக் கூட இருக்கலாம்” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

மொட்டுக் கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமும், நான்கு மாதங்களும் உள்ளன. எனவே, உரிய நேரத்தில் வெற்றி வேட்பாளரை எமது கட்சி பெயரிட்டு – அறிவிக்கும். அந்த வேட்பாளர் பஸில் ராஜபக்சவாகக்கூட இருக்கலாம்.

நாட்டின் தேவை கருதியே ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எமது கட்சி முடிவெடுக்கும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.