அமைச்சுப் பதவிகள் தொடர்பில் மொட்டின் இறுதி முடிவு.

தொடர்ச்சியாக அமைச்சுப் பதவிகளை கோரி ஜனாதிபதியின் பின்னால் செல்வதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுதியான தீர்மானத்தை எடுத்துள்ளது.

ஜனாதிபதி தமக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கினாலும், வழங்காவிட்டாலும் பொஹொட்டு கட்சியின் பணிகளை வலுவாக முன்னெடுத்துச் செல்ல பாடுபடுவது என ஆளும் கட்சியின் பேச்சாளர் ஒருவர் தேசிய பத்திரிகை ஒன்றுக்கு வாராந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

10 அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் பல தடவைகள் கோரிக்கை விடுத்திருந்த போதிலும் பல்வேறு காரணங்களுக்காக அமைச்சுப் பதவிகளை வழங்குவதில் அவர் காலதாமதம் செய்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“அமைச்சர் பதவி கொடுத்தால் கொடுங்கள். இல்லை என்றால் பிரச்சனை இல்லை. “நாங்கள் எமது பணிகளை மேற்கொண்டு வருகின்றோம். எனினும், கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட அரசாங்க காலத்தின் எஞ்சிய காலப்பகுதியை நிறைவேற்றுவதற்கு மாத்திரமே பொஹொட்டுவ ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்தது” என அவர் பத்திரிகைக்கு தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் பொதுஜன பெரமுனவுக்கு அமைச்சுகளை வழங்குவதாக முதலில் அறிவித்த ஜனாதிபதி, இரண்டாவதாக சுதந்திர தின விழாவிற்கு முன்னர் அமைச்சுப் பதவிகளை வழங்குவதாக அறிவித்ததாக அவர் கூறுகிறார்.

ஆனால் அந்த இரண்டு விஷயங்களிலும் அமைச்சு பதவி வழங்கப்படவில்லை என ஆளும் கட்சியின் செய்தி தொடர்பாளர் கூறுகிறார்.

மற்றுமொரு சந்தர்ப்பத்தில் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் தொகையை பெற்றுக்கொண்டு அமைச்சு பதவி வழங்கப்படும் என அறிவித்திருந்ததாகவும் அவர் அதே பத்திரிகைக்கு மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.