யாழில் ஓட்டோ கவிழ்ந்து விபத்து! – 11 முன்பள்ளி மாணவர்கள் வைத்தியசாலையில்…

அதிகளவிலான முன்பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஓட்டோ ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 11 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், கொழும்புத்துறை – உதயபுரம் பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

முன்பள்ளி ஒன்றுக்கு 11 மாணவர்களை ஏற்றிச் சென்ற ஓட்டோ வீதியோரமாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. அதன்போது ஓட்டோக்குள் இருந்த 11 மாணவர்களும் காயமடைந்துள்ளதுடன், ஓட்டோ சாரதியும் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த 12 பேரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.