பாவனாவுடன் முதல் படத்திலேயே அந்தரங்க உறவு..

மைக் கிடைத்தால் போதும் கண்டதையும் உளறலாம் என்று சிலர் இருக்கின்றனர். அப்படிப்பட்டவர்களில் ஒருவராக இருக்கும் இயக்குனர் சில வருடங்களுக்கு முன்பு பொது மேடை என்றும் பார்க்காமல் கண்டபடி பேசியது இப்போது பரபரப்பை கிளப்பி இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இவர் இப்படிப்பட்டவரா என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறது.

என்னவென்றால் மிஷ்கின் இயக்கத்தில் உருவான சித்திரம் பேசுதடி திரைப்படம் வந்த புதிதில் அவர் ஒரு கல்லூரி விழாவில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது அவரிடம் மாணவர்கள் இந்தப் படத்தின் மூலம் நீங்கள் எந்த மாதிரியான சந்தோஷம் அடைகிறீர்கள் என கேட்டிருக்கிறார்கள்.

உடனே கொஞ்சம் கூட யோசிக்காத மிஷ்கின் இதன் மூலம் எனக்கு கிடைத்தது பாவனா தான். அவருடன் எனக்கு இருந்த அந்தரங்க உறவு தான் என்னுடைய சந்தோஷம் என ஸ்டைலாகவும், திமிராகவும் கூறி இருக்கிறார். மலையாள நடிகையான இவர் இந்த படத்தின் மூலம் தான் தமிழில் அறிமுகமானார்.

அப்படம் வெளியாகி வரவேற்பு கிடைத்துக் கொண்டிருந்த சமயத்தில் மிஷ்கின் இப்படி பேசியது கடும் சலசலப்பையும், மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அதுவும் ஒரு கல்லூரி விழாவில் அவர் இப்படி கிறுக்குத்தனமாக பேசியது அந்த காலகட்டத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு வித்திட்டது.

ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத இயக்குனர் இந்த விஷயத்தின் மூலம் எதையோ சாதித்தது போன்ற மிதப்பில் இருந்திருக்கிறார். அதை தொடர்ந்து அவர் விழாவில் பேசிய அந்த வீடியோவும் மீடியாவில் பரவத் தொடங்கி இருக்கிறது. பிரச்சனை வேறு திசையில் பயணிப்பதை உணர்ந்து கொண்ட மிஷ்கின் தன் நண்பர் மூலம் அந்த வீடியோ வெளியில் கசியாதவாறு செய்திருக்கிறார்.

இதன் பிறகும் கூட அவர் இது போன்ற பலான விஷயங்களில் ஈடுபட்டு தான் வந்திருக்கிறார். நடிக்க வந்தாலே ஒரு நடிகை எல்லாருக்கும் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்ற வக்கிர புத்தி இருக்கும் சிலரில் மிஷ்கினும் இருக்கிறார் என்பது பலருக்கும் அதிர்ச்சியாக தான் இருக்கிறது. இதை சர்ச்சைக்குரிய பத்திரிகையாளர் வெளிப்படையாக போட்டு உடைத்து பலருக்கும் ஷாக் கொடுத்திருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.