பாடசாலை பஸ் விபத்தில் 15 மாணவர்கள் படுகாயம்.

பாடசாலை பஸ் ஒன்றும் இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பஸ்ஸும் இலங்கை போக்குவரத்துச் சேவைக்குச் சொந்தமான பஸ்ஸும் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதன்போது பாடசாலை பஸ்ஸில் பயணித்த 15 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

குளியாப்பிட்டி, ஹெட்டிபொல – கரந்திப்பல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் காயமடைந்தவர்கள் குளியாப்பிட்டி போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.