சட்டவிரோத புகலிட கோரிக்கையாளர்கள் பயணித்த படகு விபத்து.

இத்தாலியின் லம்படுசா தீவுக் பகுதி ஊடாக சட்டவிரோத புகலிட கோரிக்கையாளர்கள் பயணித்த படகு விபத்துக்குள்ளானதில் இரண்டு வயது குழந்தை ஒன்று உயிர் இழந்துள்ளதுடன், எட்டு பேர் காணாமல் போய் உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

43 பேர் குறித்த படகில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக ஏபிசி சர்வதேச செய்தி சேவை தெரிவிக்கின்றது.

இவர்கள் அனைவரும் மாலி , புர்கினோ பாசோ, கினியா நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது

Leave A Reply

Your email address will not be published.