ரிமாண்ட்’ செய்வதற்கு பதிலாக வீட்டுக் காவல்.

விளக்கமறியலுக்கு மாற்றாக வீட்டுக்காவலில் வைப்பதற்கான சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அந்நாட்டு சிறைச்சாலைகளில் நெரிசல் நீண்ட காலப் பிரச்சினையாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.

அந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக, தடுப்புக்காவல் மற்றும் சிறைத் தண்டனைக்கு மாற்றாக, சந்தேக நபர்களையும், குற்றவாளிகளையும் வீட்டுக்காவலில் தடுத்து வைப்பதற்கான சட்ட விதிகளை அறிமுகம் செய்ய, தகுந்த பரிந்துரைகளை வழங்க, உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் பொருத்தமான சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு ஒரு வரைவு ஆலோசனை வழங்குவதற்காக நீதி அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சர்கள் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.