தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்பட்ட கேப்டன் விஜயகாந்த் உடல்!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்பட்டு, தொண்டர்களும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் நுரையீரல் அழற்சி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், கடந்த 26ஆம் தேதி இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை 6.10 மணியளவில் உயிரிழந்தார்.

அதை தொடர்ந்து அவரது உடல் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து தேமுதிக அலுவலகத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. இங்கு அவைக்கப்பட்ட விஜயகாந்த்தின் உடலுக்கு திரைத்துறையினர், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் இன்று அதிகாலை விஜயகாந்த்தின் உடல் சென்னை தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமானோர் வரிசையில் காத்திருந்து விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.