யாழில் கில்மிஷாவை நேரில் சந்தித்து வாழ்த்திய ஜனாதிபதி!

இந்தியாவின் ஸீ தமிழ் தொலைக்காட்சி நடத்திய சரிகமப இசைப் போட்டியில் வெற்றியாளர் பட்டத்தைச் சூடிய யாழ். அரியாலையைச் சேர்ந்த கில்மிஷா உதயசீலனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரில் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் (04) நடைபெற்ற சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்திக்கும் கூட்டத்தின்போதே, கில்மிஷா மற்றும் அவரது குடும்பத்தினரை ஜனாதிபதி சந்தித்துக் கலந்துரையாடினார்.

Leave A Reply

Your email address will not be published.