கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் சாவு!

மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் கிளிநொச்சி, இராமநாதபுரம் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி ஸ்ரீரங்கநாத பெருமாள் ஆலய தேர் திருப்பணி வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 29 வயதுடைய ஜெகதீஸ்வரன் பவித்திரன் என்ற வவுனியா, பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இளைஞரின் சடலம் கிளிநொச்சி நீதிமன்ற நீதிவான் பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

சம்பவம் தொடர்பில் இராமநாதபுரம் பொலிஸார் விசரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.