கொழும்பில் ஒருவர் வெட்டிப் படுகொலை – சந்தேகநபர்களுக்கு வலைவீச்சு.
கொழும்பு, வாழைத்தோட்டம் பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு 12 ஐச் சேர்ந்த 48 வயதுடைய நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளனர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.