ராஜீவ் கொலை வழக்ககில் விடுதலையாகி சிறப்பு முகாமில் இருக்கும்:சாந்தனுக்கு தீவிர சிகிச்சை

கான்பூர் ராமர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையாகி இன்னமும் வெளியேற முடியாமல் சிறப்பு முகாமில் இருக்கும், சாந்தன் உடல்நிலை பாதிக்கப்பட்டு, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா்.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தவா்களை 2022-இல் உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. அதில் ஒருவரான சாந்தன் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளாா்.

இலங்கையை பூா்வீகமாகக் கொண்ட அவருக்கு, ஜன.24-ஆம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டது. பின்னா், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

மஞ்சள் காமாலை, கல்லீரல் பாதிப்புடன் இருக்கும் சாந்தனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்திருப்பதால், அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாக ராஜீவ் காந்தி மருத்துவமனை மருத்துவா்கள் தெரிவித்தனா்.

மேலதிக செய்திகள்

தில்லி: கல்காஜி கோயிலில் மேடை இடிந்து விழுந்ததில் பெண் பலி, 17 பேர் காயம்

முதல்வா் நிதீஷ் குமார் ராஜிநாமா!

DAN NEWS மேல்மாகாண இரு மொழித் தொலைக்காட்சி சேவை

2002 கிராம உத்தியோகத்தர் வெற்றிடங்களுக்கான முடிவுகள் வெளியானது : தகுதியானவர்களது பெயர்கள் ….

Leave A Reply

Your email address will not be published.