பாண்டிருப்பு கடற்கரையில் வயோதிபர் சடலமாக மீட்பு!

அம்பாறை மாவட்டம், பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பு கடற்கரையில் வயோதிபர் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டார்.

மேற்படி நபர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று சடலத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 50 அல்லது 55 வயதுக்கு உட்பட்டவராக இருக்க முடியும் என்று பொலிஸார் கூறினர்.

உயிரிழந்தவர் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.