பாகிஸ்தானில் 2023ல் ஒரு நாளைக்கு 11 குழந்தைகள் துஷ்பிரயோகம்.

பாகிஸ்தானில் 2023 ஆம் ஆண்டில் 4,213 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டின் அரச சார்பற்ற நிறுவனமான சாஹில் அமைப்பும் தேசிய மனித உரிமைகள் ஆணையமும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அந்தப் புள்ளி விவரத்தின்படி, கடந்த ஆண்டு சராசரியாக நாளொன்றுக்கு சிறுவர் துஷ்பிரயோகங்களின் எண்ணிக்கை 11 ஆக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் துஷ்பிரயோகம், கடத்தல், குழந்தைகள் காணாமல் போதல் மற்றும் குழந்தை திருமணம் உட்பட அனைத்து வகையான சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் குறித்த அறிக்கை உள்ளடக்கியுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

அறிக்கையின்படி, துஷ்பிரயோகத்திற்கு ஆளான குழந்தைகளில் 53% பெண்கள் மற்றும் 47% சிறுவர்கள், மேலும் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட குழந்தைகள் 6 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள். அந்த வயதில் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளே அதிகம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகவும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.