அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடை – உயர் நீதிமன்றம்

அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் அகியவற்றை பயன்படுத்த ஒ.பன்னீர்செல்வத்திற்கு நிரந்தர தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக்கோரி அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், வழக்கில் பதிலளிக்க ஒ.பி.எஸ். தாமதப்படுத்துவதை சுட்டிக்காட்டி, அதிமுக-வின் பெயர்,கொடி, சின்னம், லெட்டர் ஹெட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு இடைக்கால தடை விதத்து உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இடைக்கால தடைக்காலம் முடிந்த நிலையில் தடையை நீட்டிக்க வேண்டாம் எனவும், வழக்கில் தீர்ப்பளிக்கும் வரை அவற்றை பயன்படுத்த மாட்டேன் என ஒபிஎஸ் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதி வழக்கில் இரு தரப்பு இறுதி வாதங்களை கேட்டறிந்தார்.

இரு தரப்பு வாதங்களும் மார்ச் 12ஆம் தேதி நிறைவடைந்த நிலையில் இடைக்கால மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்திருந்தார்.

இந்த மனுக்களில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஒ.பன்னீர்செல்வத்திற்கு நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலதிக செய்திகள்

போதைப் பொருள் பாவித்து பஸ்களை செலுத்திய 08 சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கைது

வருவது பொதுத்தேர்தலா ? ஜனாதிபதி தேர்தலா? அமைச்சரவைக்கு அறிவித்த ஜனாதிபதி!

பாடப்புத்தகங்களோ சீருடைகளோ கிடைக்காத பாடசாலைகள் இருப்பின் உடனடியாக தெரிவிக்குமாறு கல்வி அமைச்சின் அறிவிப்பு.

கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் 996 சந்தேக நபர்கள் கைது.

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா விவாதம் தொடங்கியது.

பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளின் விடுதலை ரத்து: உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஒருவா் மறுஆய்வு மனு

Leave A Reply

Your email address will not be published.