சிதைவடைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

கால்வாயில் இருந்து சிதைவடைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

எல்பிட்டிய, மிரிஸ்வத்த பகுதியில் உள்ள கால்வாயில் இருந்து இன்று (23) இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் மிகவும் வீங்கியும் சிதைந்தும் காணப்படுகின்றமையால் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது கொலையா அல்லது தற்கொலையா அல்லது வேறு விபத்தா என்பது குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.