மைத்திரியை உடன் கைது செய்ய வேண்டும்! – முஷாரப் எம்.பி. வலியுறுத்து.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள தகவல்களால் இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்று அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் தெரிவித்தார்

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“இலங்கையின் அரசியல் இறையாண்மைக்கு மாபெரும் பங்கம் ஏற்பட்டுள்ளது.

மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் உண்மை எனில், குற்றச் செயலையும், குற்றவாளிகளையும் மறைத்த மைத்திரிபால உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்.

அத்துடன் அவரிடம் சரியான முறையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சூத்திரதாரிகளுக்குக் கடுமையான தண்டனையை வழங்க வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.