மைத்திரியின் பரபரப்புக் கருத்து: சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சி.ஐ.டியில் முறைப்பாடு.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்துத் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (23) முறைப்பாடு அளித்துள்ளார்.

மேற்படி முறைப்பாட்டைக் கையளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.

அதன்போது, உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் தொடர்பில் தமக்குத் தெரியும் என்று முன்னாள் ஜனாதிபதி கூறியிருக்கும் விடயத்தில் உண்மை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.

எனவே, உடனடியாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைது செய்யப்பட்டு, உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.